by Staff Writer 20-01-2022 | 12:38 PM
Colombo (News 1st) கொள்கை வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை தீர்மானித்துள்ளது.
50 புள்ளிகளால் கொள்ளை வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நிலையான வைப்புக்கான வட்டி 5.5 வீதமாகவும் நிலையான கடனுக்குரிய வட்டி 6.5 வீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கடனுக்கான நிலையான வட்டி வீதம் அதிகரிக்கப்படுவதுடன், வங்கிகளின் வட்டி வீதம் 9.5 வீதமாக காணப்படுகின்றது.