இலங்கைக்கு கடனுடன் நிபந்தனைகளை விதிக்க வேண்டும்

இலங்கைக்கு கடன் வழங்கும் போது நிபந்தனைகள் விதிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

by Staff Writer 20-01-2022 | 8:48 PM
Colombo (News 1st) இலங்கைக்கு கடன் வசதி அறிவித்துள்ள இந்தியா அதற்கான நிபந்தனைகளையும் விதிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டொக்டர் S.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திலுள்ள அதிகாரங்களை குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழங்க வேண்டும் என இலங்கைக்கு இந்திய அரசு நிபந்தனை விதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை மத்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் எனவும் டொக்டர் S.ராமதாஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.