English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
20 Jan, 2022 | 10:52 am
Colombo (News 1st) மஸ்கெலியா – கங்கேவத்த பகுதியில் இளம் தாயொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஒரு பிள்ளையின் தாயான 24 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, யுவதியின் சடலம் நேற்று (19) மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், கழுத்து நெரிக்கப்பட்டு யுவதி கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக யுவதி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர், சடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்த யுவதியின் 23 வயதான கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
28 Jan, 2022 | 03:52 PM
18 Mar, 2021 | 01:19 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS