சிறுமி கொலை: ஐவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

மூங்கிலாறு சிறுமி கொலை: ஐவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

by Staff Writer 19-01-2022 | 3:38 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - மூங்கிலாறு கிராமத்தில் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 05 சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் , நீதவான் T.சரவணராஜா முன்னிலையில் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மூங்கிலாறு பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி 13 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் கொலை தொடர்பில் தாய், தந்தை, சகோதரி, மைத்துனர், மைத்துனரின் தம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்