800 கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை

துறைமுகத்தில் சிக்கியுள்ள 800 கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை

by Staff Writer 19-01-2022 | 11:57 AM
Colombo (News 1st) டொலர் பற்றாக்குறை காரணமாக துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கியுள்ள 800 கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். குறித்த கொள்கலன்களின் விடயதானங்கள் அடங்கிய ஆவணங்களை மத்திய வங்கிக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டார். அதனடிப்படையில், நாளை (20) முதல் குறித்த கொள்கலன்கள் விடுவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். அரிசி, சீனி மற்றும் பருப்பு ஆகிய பொருட்கள் இதன்மூலம் சந்தைக்கு விடுவிக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஏனைய செய்திகள்