கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுமி பலி

கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுமி பலி

by Staff Writer 19-01-2022 | 1:10 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கரணவாய் பகுதியில் சிறுமியொருவர் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கிணற்றில் வீழ்ந்த சிறுமி மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். கரணவாய் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியொருவரே நேற்றிரவு (18) கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சிறுமியின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நெல்லியடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.