மின்னுற்பத்தி தொகுதியொன்றின் செயற்பாடு நிறுத்தம்

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி தொகுதியொன்றின் செயற்பாடுகள் நிறுத்தம்

by Staff Writer 19-01-2022 | 9:21 AM
Colombo (News 1st) களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி தொகுதியிலுள்ள மின்னுற்பத்தி நிலையமொன்றின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. எரிபொருள் இன்மையால் இன்று (19) காலை முதல் மின்னுற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் அன்றூ நவமணி குறிப்பிட்டார். இதனால் தேசிய கட்டமைப்புக்கு தேவையான 150 மெகாவாட் மின்சாரம் இழக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எவ்வாறாயினும், மின்னுற்பத்தி நிலையத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.