கற்பாறைகளுக்கு இடையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

by Staff Writer 19-01-2022 | 7:33 AM
Colombo (News 1st) கேகாலை - தெஹியோவிட்ட, அட்டுலுகம புஞ்சிக்கந்த பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு கற்பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். ​ பிரதேசவாசிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 45 வயதான ஆணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.