English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
17 Jan, 2022 | 5:22 pm
Colombo (News 1st) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் நாளை (18) ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் நாளைய (18) கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம், நாளை (18) காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாளை (18) காலை 9.15 மணிக்கு விருந்தினர்களின் வருகை இடம்பெறவுள்ளதுடன் இதில் முதலாவதாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்டோரின் பிரசன்னம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்ற சபை அமர்வு ஒத்திவைக்கப்படும்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வுகள் அனைத்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே இடம்பெறுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
20 Aug, 2020 | 07:14 AM
15 May, 2022 | 08:29 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS