Colombo (News 1st) ஹெய்ட்டி ஜனாதிபதி ஜொவெனல் மொய்ஸின் (Jovenel Moïse) கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான அந்நாட்டின் முன்னாள் செனட்டர் ஒருவர் ஜமைக்க நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
John Joel Joseph என்ற ஹெய்ட்டியின் முன்னாள் செனட்டர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக ஜமைக்கா காவல் படைகளின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஹெய்ட்டி தலைநகர் Port-au-Prince இலுள்ள வாசஸ்தலத்தைச் சூழ்ந்த ஆயுததாரிகள், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி ஜொவெனல் மொய்ஸ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலைக்கான ஆயுதங்களை விநியோகித்தமை, கூட்டங்களைத் திட்டமிட்டமை போன்றவற்றை Joseph மேற்கொண்டதாக ஹெய்ட்டியின் தேசிய பொலிஸ் தலைவர் Leon Charles குறித்த சம்பவம் இடம்பெற்ற சிறிது நேரத்திலேயே தெரிவித்திருந்தார்.
இந்தக் கொலை தொடர்பான விசாரணைகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI மேற்கொண்டு வருகின்ற நிலையில், அதனுடைய கோரிக்கைக்கு அமைய இந்தக் கைது இடம்பெற்றதா என்பது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க ஜமைக்கா காவல் படைகளின் பேச்சாளர் மறுத்துவிட்டார்.
கொலை செய்யப்பட்ட ஹெய்ட்டி ஜனாதிபதி ஜொவெனல் மொய்ஸ்