நாகவத்தை கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் நல்லடக்கம்

by Staff Writer 16-01-2022 | 5:28 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கிரான், நாகவத்தை கடலில் நீராடச் சென்று உயிரிழந்த மாணவர்கள் இருவரின் இறுதிக் கிரியைகள் இன்று (16) நடைபெற்றன. மாணவர்களின் பூதவுடல்கள் மட்டக்களப்பு - கிரான் இந்து பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன. மாணவர்களின் இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கிரான் தேசிய பாடசாலை முன்பாக வெள்ளைக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் - நாகவத்தை கடற்பகுதியில் நேற்று முன்தினம் (14), ஏழு பாடசாலை மாணவர்கள் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது மூவர் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டதுடன் ஒருவர் காப்பாற்றப்பட்டார். நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இரண்டு மாணவர்களின் சடலங்களும் நேற்று (15) மீட்கப்பட்டன.