by Staff Writer 16-01-2022 | 3:03 PM
Colombo (News 1st) வவுனியா - ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 264 கிலோகிராமுக்கும் அதிக கஞ்சா தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ள சுற்றிவளைப்பின் போது குறித்த தொகை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக ஈரப்பெரியக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கேரள கஞ்சா தொகை லொறியொன்றில் கொண்டுசெல்லப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
கீரிமலையைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே குறித்த கேரள கஞ்சா தொகையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.