by Staff Writer 16-01-2022 | 4:11 PM
Colombo (News 1st) இரத்தினபுரி ஶ்ரீ பலாபத்தல பகுதியில் களு கங்கையில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
அங்குருவாதோட்டையைச் சேர்ந்த 22 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்போது 10 வயதான பிள்ளையொன்றும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (15) மாலை களு கங்கையில் நீராடிக்கொண்டிருந்த சிலர் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டதுடன் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
காணாமல் போன பிள்ளையை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனிடையே, கொஸ்லாந்த மகல்தெனிய ஆற்றில் நீராடச்சென்ற நால்வரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.