English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
16 Jan, 2022 | 5:28 pm
Colombo (News 1st) மட்டக்களப்பு – கிரான், நாகவத்தை கடலில் நீராடச் சென்று உயிரிழந்த மாணவர்கள் இருவரின் இறுதிக் கிரியைகள் இன்று (16) நடைபெற்றன.
மாணவர்களின் பூதவுடல்கள் மட்டக்களப்பு – கிரான் இந்து பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன.
மாணவர்களின் இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கிரான் தேசிய பாடசாலை முன்பாக வெள்ளைக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் – நாகவத்தை கடற்பகுதியில் நேற்று முன்தினம் (14), ஏழு பாடசாலை மாணவர்கள் நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது மூவர் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டதுடன் ஒருவர் காப்பாற்றப்பட்டார்.
நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இரண்டு மாணவர்களின் சடலங்களும் நேற்று (15) மீட்கப்பட்டன.
19 May, 2022 | 02:18 PM
16 Mar, 2022 | 01:55 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS