களனி ஆற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

கிராண்ட்பாஸ் பகுதியில் களனி ஆற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

by Staff Writer 15-01-2022 | 5:30 PM
Colombo (News 1st) கிராண்ட்பாஸ் பகுதியில் களனி ஆற்றில் இருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 27 வயதுடைய குறித்த நபர் நேற்று முன்தினம் (13) முதல் காணாமற்போயுள்ளதாக உறவினர்களால் நேற்று (14) பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.