இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 1000 வீடுகள் கையளிப்பு

by Staff Writer 15-01-2022 | 8:05 PM
Colombo (News 1st) இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 1000 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு நுவரெலியா - கொட்டகலையில் இன்று (15) நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரும் கலந்துகொண்டிருந்தார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ , சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, 1000 வீடுகளுக்கான திறப்புகள் அதன் உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டன.