இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் கடன் பெற திட்டம்

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் கடன் பெறுதல் தொடர்பில் கலந்துரையாடல் 

by Staff Writer 15-01-2022 | 3:44 PM
Colombo (News 1st) உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா, இலங்கையுடன் கைகோர்த்திருக்கும் என இந்திய வௌியுறவு அமைச்சர் கலாநிதி S.ஜெங்சங்கர் மீண்டும் உறுதியளித்துள்ளார். நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவுடன் இடம்பெற்ற காணொளி கலந்துரையாடலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சருடன் கலந்துரையாடியதாக இந்திய வௌியுறவு அமைச்சர் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் கடன் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக கலாநிதி S. ஜெங்சங்கரின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிசக்தி பாதுகாப்பிற்கு பங்களிக்கும் திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் இந்தியாவின் திட்டங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்தும் நிதி அமைச்சர் மற்றும் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். இலங்கை சிறையிலுள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க வேண்டும் எனவும் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

ஏனைய செய்திகள்