அதிபர், ஆசிரியர் சேவைகள் தனியான சேவைகளாக அறிவிப்பு

அதிபர், ஆசிரியர் சேவைகள் தனியான சேவைகளாக அறிவிப்பு

by Staff Writer 15-01-2022 | 4:15 PM
Colombo (News 1st) இலங்கை அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசனை சேவை மற்றும் ஆசிரியர் சேவை ஆகியன தனியான சேவைகளாக அறிவிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. 2021 ஆகஸ்ட் 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசனை சேவை மற்றும் ஆசிரியர் சேவை ஆகிய தனித்தனி சேவைகளாக செயற்படுவதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.