by Staff Writer 15-01-2022 | 9:03 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கிரான், நாகவத்தை கடலில் குளிக்கச்சென்று காணாமற்போன மாணவர்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகவத்தை கடற்பகுதியில் நேற்று (14) பிற்பகல் பாடசாலை மாணவர்கள் 7 பேர் நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது, மூவர் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டதுடன், ஒருவர் காப்பாற்றப்பட்டிருந்தார்.
நீரில் மூழ்கி காணாமற்போயிருந்த ஏனைய இருவரும் இன்று சடலமாக மீட்கப்பட்டனர்.
இன்று பிற்பகல் வேளையில் ஒரு மாணவரின் சடலம் மீட்கப்பட்டதுடன், மற்றைய மாணவரின் சடலம் இரவு 7 மணியளவில் மீட்கப்பட்டது.