குளிக்கச்சென்ற சிறுவர்கள் இருவரை காணவில்லை

வாழைச்சேனையில் கடலில் குளிக்கச்சென்ற சிறுவர்கள் இருவரை காணவில்லை

by Staff Writer 14-01-2022 | 5:11 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் - நாகவத்தை கடற்பகுதியில் குளிக்கச்சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர். நீரில் மூழ்கிய மூவர் காணாமற்போன நிலையில், ஒரு சிறுவன் காப்பாற்றப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நண்பர்கள் 7 பேர் இன்று மதியம் 1.30 அளவில் நாகவத்தை கடற்பகுதியில் குளிக்கச்சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. காணாமற்போன சிறுவர்கள் இருவரையும் பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து தேடி வருகின்றனர். வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.