by Staff Writer 14-01-2022 | 5:38 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மரக்கறி தோட்டத்தில் உழவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில், உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி குடைசாய்ந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
புத்தூர் - கலைமதி கிராமத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.