அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரவாரத்துடன் ஆரம்பம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரவாரத்துடன் ஆரம்பம்

by Bella Dalima 14-01-2022 | 3:53 PM
Colombo (News 1st) உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரவாரத்துடன் ஆரம்பமானது. 700 காளைகள் பங்கேற்பதுடன், 300 வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். மாநில அரசின் கடடுப்பாடுகளுடன் இன்று காலை 7.30 அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆரம்பமாகின. கொரோனா காரணமாக 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொடியசைத்து ஜல்லிக்கட்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். முதல்வர் சார்பில் சிறந்த காளைக்கு காரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு மோட்டார் சைக்கிளும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.