நான்காவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு

மொறட்டுவை - கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் நான்காவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 13-01-2022 | 4:18 PM
Colombo (News 1st) 101 மற்றும் 100 மார்க்கத்தில் பயணிக்கும் மொறட்டுவை - கொழும்பு தனியார் பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நான்காவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள பஸ் ஊழியர்கள் இருவரை விடுவிக்குமாறு கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டது. பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.