நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

by Staff Writer 13-01-2022 | 5:49 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். களனிதிஸ்ஸ மின் உற்பத்தி வளாகத்தில் உள்ள 2 மின் உற்பத்தி நிலையங்களில் டீசல் இல்லாமையினால் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. இதனால் தேசிய கட்டமைப்பில் 300 மெகாவாட் மின்சாரம் இல்லாது போயுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர், மேலதிக பொது முகாமையாளர் அன்ரூ நவமணி குறிப்பிட்டார். வலய ரீதியில் இரவு நேரத்திலும் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என அவர் கூறினார். இதனிடையே, மின்னுற்பத்தி நிலையத்திற்கு தேவையான டீசலை ஏற்றிய இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. டீசலை பெற்றுக்கொள்வதற்கு பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு பணம் செலுத்த வேண்டும் எனவும், இதற்கு மத்திய வங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர், மேலதிக பொது முகாமையாளர் அன்ரூ நவமணி சுட்டிக்காட்டினார்.