by Staff Writer 13-01-2022 | 4:38 PM
Colombo (News 1st) பாரசூட்டில் பறந்துகொண்டிருந்த நிலையில் கீழே வீழ்ந்து காயமடைந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
35 வயதான ரஷ்ய பிரஜையொருவரே 30 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்துள்ளார்.
கலஹா, தெல்தோட்டை - ரெலிமங்கொட பகுதியிலேயே அவர் வீழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.