by Staff Writer 12-01-2022 | 11:58 AM
Colombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) காலை யாழ். மறை மாவட்ட ஆயரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ். மாவட்ட மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இன்று (12) பிறந்த தினத்தை கொண்டாடும் எதிர்க்கட்சித் தலைவர், இதன்போது ஆசி பெற்றுக் கொண்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான புத்திக்க பத்திரன, எரான் விக்ரமரட்ன உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் நேற்றிரவு (11) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டிருந்தார்.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான புத்திக்க பத்திரன, எரான் விக்ரமரட்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது தைப்பொங்கலுக்கான பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.