பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

by Staff Writer 11-01-2022 | 9:11 PM
Colombo (News 1st) பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளை நிவர்த்திக்குமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று (11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று முற்பகல் ஒரு மணியளவில் கொழும்பு லோட்டஸ் வீதியில் ஒன்றுகூடிய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் பேரணியாக ஜனாதிபதி செயலகம் வரை சென்றனர். இரண்டு வருடங்களுக்கும் அதிகக்காலம் மூடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களை மீள திறக்குமாறு இவர்கள் வலியுறுத்தினர். அத்துடன், மாணவர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்தித்தல், கல்விக்கு மொத்த தேசிய உற்பத்தியில் 6 வீதத்தை ஒதுக்கல் என்பனவும் இவர்களின் கோரிக்கையாகும். பொலிஸார் தலையிட்டு ஐந்து மாணவர்களை கலந்துரையாடலுக்கு அழைத்துச்சென்றனர். கலந்துரையாடலின் பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் கலைந்து சென்றனர்.