சாரதியின் கவனயீனத்தால் பறிபோன உயிர்

by Staff Writer 11-01-2022 | 10:55 AM
Colombo (News 1st) நாவலப்பிட்டி பொது பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள பாதசாரிக் கடவையில் நேற்று (10) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கினிகத்ஹே​னையிலுருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பெண்ணொருவரை மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பெண் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 60 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சாரதியின் கவனயீனத்தால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.