இளவாலை மீனவரின் சடலம் மாதகலில் கரையொதுங்கல்

by Staff Writer 11-01-2022 | 6:03 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - மாதகல் கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மல்லாகம் நீதவானால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, இன்று (11) மாலை சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பொலிஸார் கூறினர். சடலம் மீதான பிரேத பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். யாழ். இளவாலை, குசுமந்துறை பகுதியை சேர்ந்த 35 வயதான மீனவர் ஒருவரே உயிரிழந்துள்ளார். படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.