by Staff Writer 11-01-2022 | 11:44 AM
Colombo (News 1st) புத்தளம் - சேகுவன் தீவு பகுதியில் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றமையே கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் - மூன்றாம் கட்டை பகுதியை சேர்ந்த 38 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.