மூதூர் பஸ் விபத்தில் 26 பேர் காயம்

by Staff Writer 10-01-2022 | 2:38 PM
Colombo (News 1st) திருகோணமலை - தோப்பூர் பட்டித்திடல் பகுதியில் பஸ்ஸொன்றும் டிப்பர் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர். அம்பாறையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் டிப்பரும் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் பெண்கள் மூவரும் 23 ஆண்களும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (10) காலை 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளதால், மூவரும் திருகோமணலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்து இடம்பெற்றதால் திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டிருந்ததாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.