மின்சாரம், எரிசக்தி தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ஜனாதிபதி பணிப்புரை

by Staff Writer 10-01-2022 | 3:56 PM
Colombo (News 1st) பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார். மின்வெட்டு விவகாரம் தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறைகளின் தலைவர்களுடன் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். நிலக்கரி மற்றும் புதைபடிவ எரிபொருளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.