நாளை முதல் வழமைக்கு திரும்பும் கல்வி நடவடிக்கைகள்

நாளை (10) முதல் வழமைக்கு திரும்பும் கல்வி நடவடிக்கைகள்

by Staff Writer 09-01-2022 | 5:54 PM
Colombo (News 1st) நாளை (10) முதல் வழமைபோன்று அனைத்து மாணவர்களும் பாடசாலைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து மாணவர்களையும் ஒ​ரே தடவையில் பாடசாலைக்கு அழைப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கை தொடர்பான மேலதிக செயலாளர் லலிதா எகொடவெல தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பாடசாலைகளிலுள்ள சிற்றுண்டிச்சாலைகளை தொடர்ந்தும் மூடி வைப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது. பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தின் போதும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மேலதிக செயலாளர் லலிதா எகொடவெல தெரிவித்துள்ளார்.