English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
09 Jan, 2022 | 8:35 pm
Colombo (News 1st) கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில் சேவை, 8 பெட்டிகளுடன் இன்று (09) பயணத்தை ஆரம்பித்தது.
இன்று (09) அதிகாலை 5.10 மணியளவில் கல்கிசையிலிருந்து சேவையை ஆரம்பித்த ரயில், நண்பகல் 12.15 மணிக்கு யாழ். ரயில் நிலையத்தை சென்றடைந்தது.
பின்னர் அங்கிருந்து காங்கேசன்துறை ரயில் நிலையம் வரை பயணித்தது.
மீண்டும் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு பயணத்தை ஆரம்பித்த குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில், 1.37 மணிக்கு யாழ். புகையிரத நிலையத்திலிருந்து சேவையை ஆரம்பித்தது.
இந்த கடுகதி ரயில் இரவு 8 மணிக்கு கொழும்பு – கோட்டையை வந்தடையும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்தது.
இதுவரை காலமும் 5 குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன் சேவையில் ஈடுபட்ட நகர்சேர் கடுகதி ரயில் சேவைக்கு பதிலாக இன்றிலிருந்து மேலும் 3 பயணிகள் பெட்டிகள் இணைக்கப்பட்டு, 8 பயணிகள் பெட்டிகளைக் கொண்ட புதிய ரயிலொன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் கடன் உதவியின் கீழ் குறித்த ரயில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
30 Apr, 2022 | 04:40 PM
11 Jul, 2021 | 04:57 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS