by Staff Writer 08-01-2022 | 7:38 PM
Colombo (News 1st) கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்ட முருத்தெட்டுவே ஆனந்த தேரரை பாராட்டும் நிகழ்வொன்று இன்று (08) கொழும்பில் நடைபெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
பொதுச்சேவை ஐக்கிய தாதியர் சங்கம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் அமைச்சர்கள், தாதியர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.