மாலைத்தீவு அருகே இலங்கை மீன்பிடிப் படகு விபத்து

மாலைத்தீவு அருகே இலங்கை மீன்பிடிப் படகு விபத்து; மீனவரை காணவில்லை

by Staff Writer 08-01-2022 | 3:40 PM
Colombo (News 1st) மாலைத்தீவிற்கு அருகேயுள்ள கடற்பிராந்தியத்தில் இலங்கை மீனவர்களின் படகொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. படகு விபத்திற்குள்ளானதை அடுத்து, அதில் பயணித்த 5 இலங்கை மீனவர்கள் வர்த்தகக் கப்பலொன்றின் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த படகில் 6 மீனவர்கள் பயணித்துள்ளதுடன், ஒருவர் காணாமற்போயுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட மீனவர்கள் இன்று மாலை காலி கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 'அசேல புத்தா' எனும் குறித்த மீன்பிடிப் படகு, பேருவளையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்றுள்ளது. குறித்த படகுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக படகின் உரிமையாளர் கடந்த 5 ஆம் திகதி பேருவளை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தார். இது குறித்து மாலைத்தீவு மற்றும் மும்பை கடற்படை அதிகாரிகளுக்கு அறிவித்திருந்ததாக கடற்படை குறிப்பிட்டது.