by Bella Dalima 07-01-2022 | 3:50 PM
Colombo (News 1st) மேலும் ஒருதொகை நனோ நைட்ரஜன் திரவ உரம் இம்மாத இறுதிக்குள் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக கமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.
05 இலட்சம் லிட்டர் நனோ நைட்ரஜன் திரவ உரம் கொண்டுவரப்படவுள்ளதாக கமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
பெரும்போகத்தை ஆரம்பிப்பதற்கு தாமதமான மாவட்டங்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கமைவாக பதுளை, நுவரெலியா, வவுனியா, அனுராதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நெற்செய்கைக்காக தேவைப்படும் உரமாக இதனை பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.