by Bella Dalima 07-01-2022 | 6:48 PM
Colombo (News 1st) தனுஷ்க குணதிலக, குசல் மென்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோருக்கு விதிக்கப்பட்டிந்த தடையை நீக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர்களுக்கு எதிரான தடை நீக்கப்பட்டுள்ளது.
இன்று (07) நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
குறித்த வீரர்கள் மூவருக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு இதுவரை 7 மாதங்களாக தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் Bio-bubble முறைமையை மீறியமைக்காக இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது.