சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பில் தீ பரவல்

சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பிலுள்ள வீட்டில் தீ பரவல்; இளைஞர் காயம்

by Bella Dalima 07-01-2022 | 4:50 PM
Colombo (News 1st) மொரட்டுவை - சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 19 வயது இளைஞர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் தென் கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீயை கட்டுப்படுத்துவதற்காக 02 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாக மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்தது. தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.