இந்தியா மன வருத்தத்தில் இருக்கிறது

இந்தியா மன வருத்தத்தில் இருப்பதாக உதய கம்மன்பில கருத்து

by Bella Dalima 07-01-2022 | 7:50 PM
 Colombo (News 1st) திருகோணமலை எண்ணெய் குதங்களை மீள பெற்றுக்கொண்டமையினால், இந்தியா மனவருத்தம் அடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இதன் காரணமாக இந்தியாவின் உளவாளிகளும் சகாக்களும் தன்னை தாக்குவதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள தாம் தயாராகவே இருப்பதாகக் கூறினார்.