அரிசி இறக்குமதிக்கு மியன்மாருடன் உடன்படிக்கை

அரிசி இறக்குமதிக்கு மியன்மாருடன் உடன்படிக்கை கைச்சாத்து

by Bella Dalima 07-01-2022 | 6:13 PM
Colombo (News 1st) ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்காக மியன்மாருடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சு மற்றும் மியன்மார் அரசாங்கத்துடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி நாட்டில் களஞ்சியப்படுத்தி வைக்கும் நோக்கில் இந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.