கொழும்பின் சில பகுதிகளில் 16 மணி நேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 16 மணி நேர நீர்வெட்டு

by Staff Writer 06-01-2022 | 11:54 AM
Colombo (News 1st) கொழும்பின் சில பிரதேசங்களுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (08) காலை 8.00 மணி முதல் இரவு 12.00 வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீரவழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, ?கொழும்பு , தெஹிவளை – கல்கிசை, கோட்டை, கடுவளை ஆகிய மாநகர சபைகளுக்குட்பட்ட பிரதேசங்கள் ?மஹரகம, பொரலஸ்கமுவ, கொலொன்னாவ நகர சபைகளுக்குட்பட்ட பிரதேசங்கள் ?கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் இரத்மலானையில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அவசர திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீரவழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.