இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அசாத் சாலி முறைப்பாடு

by Staff Writer 06-01-2022 | 9:13 PM
Colombo (News 1st) தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை முன்வைத்தார். தன்னை கைது செய்து, சுமார் 9 மாத காலம் தடுத்து வைத்திருந்தமையினால், தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறும் அசாத் சாலி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.