English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
06 Jan, 2022 | 4:56 pm
Colombo (News 1st) பருத்தித்துறை பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தினுள் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்ற சந்தேகநபர் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பருத்தித்துறை பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தினுள் சந்தேகநபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதன்போது, பொலிஸாரால் மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மதுபோதையில் மனைவியை தாக்கிய குற்றச்சாட்டில் நேற்று (05) கைது செய்யப்பட்ட 46 வயதான சந்தேகநபரே தூக்கிட்டுக்கொள்ள முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்காகிய பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சந்தேகநபரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் பாதுகாப்புடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
23 Apr, 2022 | 03:14 PM
21 Feb, 2022 | 04:37 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS