சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகும் பானுக ராஜபக்ஸ

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகும் பானுக ராஜபக்ஸ

by Staff Writer 05-01-2022 | 7:01 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக விலகுவதாக பானுக ராஜபக்ஸ அறிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் தமது பதவி விலகல் கடிதத்தை அவர் கையளித்துள்ளார். தனிப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு பதவி விலகல் தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அதன் எதிர்காலத்திலும் வெற்றிகளைத் தொடர வேண்டுமென பானுக ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி பானுக ராஜபக்ஸ விளையாடியுள்ளார்.