கைவிடப்பட்ட 2 வெடிகுண்டுகளை விற்கச்சென்ற 6 பேர் கைது

by Staff Writer 05-01-2022 | 2:58 PM
Colombo (News 1st) போரின் போது கைவிடப்பட்ட 2 வெடிகுண்டுகளை இரும்பிற்கு விற்பனை செய்ய கொண்டு சென்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணியில் இருந்தே குறித்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சுமார் 400 கிலோகிராம் எடைகொண்ட இரண்டு வெடிகுண்டுகளையும் சந்தேகநபர்கள் விற்பனை செய்வதற்காக எடுத்து சென்றமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைவேலி, புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களை இன்று (05) மாங்குளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.