ஐஸ் போதைப்பொருளுடன் திருகோணமலை துறைமுக ஊழியர் உள்ளிட்ட நால்வர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் திருகோணமலை துறைமுக ஊழியர் உள்ளிட்ட நால்வர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் திருகோணமலை துறைமுக ஊழியர் உள்ளிட்ட நால்வர் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2022 | 4:08 pm

Colombo (News 1st) ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் ​போதைப்பொருளுடன் துறைமுக ஊழியர் ஒருவர் உள்ளிட்ட நால்வர் அங்குலான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவரிடமிருந்து 780 கிராமும் இன்னொருவரிடமிருந்து 100 கிராமும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றைய சந்தேகநபர்கள் வசமிருந்து 80 கிராம் மற்றும் 40 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

திருகோணமலையை சேர்ந்த சந்தேகநபர்கள் மூவரில் ஒருவர் திருகோணமலை துறைமுகத்தில் பணியாற்றுவதுடன், மற்றைய சந்தேகநபர் பாணந்துறையை சேர்ந்தவராவார்.

சந்தேகநபர்கள் மொரட்டுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, தடுத்து வைப்பு உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்