இலங்கையின் பசுமை விவசாய திட்டத்திற்கு பாராட்டு

இலங்கையின் பசுமை விவசாய திட்டத்திற்கு ஐ.நா சபை பாராட்டு

by Staff Writer 05-01-2022 | 7:26 AM
Colombo (News 1st) நாட்டின் பசுமை விவசாயத் திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் கன்னி விக்னராஜா (Kanni Wignaraja), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை நேற்று (04) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். 165 நாடுகளில் இலங்கை 87 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக கன்னி விக்னராஜா இதன்போது தெரிவித்துள்ளார். இந்நிலையை மேலும் மேம்படுத்தி பசுமை விவசாய வேலைத்திட்டத்திற்காக வௌிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.