English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
05 Jan, 2022 | 8:52 am
Colombo (News 1st) திருத்தப்பட்ட பஸ் கட்டணங்கள் இன்று (05) முதல் அமுல்படுத்தப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
புதிய கட்டணங்களுக்கு அமைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 14 ரூபாவிருந்து 17 ரூபா வரை அதிகரித்துள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணங்கள் யாவும் கடந்த 29 ஆம் திகதி, 17.44 வீதத்தால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிணங்க சொகுசு மற்றும் அரை சொகுசு பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என நிலான் மிரண்டா கூறினார்.
அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டணங்களை பஸ்ஸில் காட்சிப்படுத்துமாறு அனைத்து பஸ் ஊழியர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின் 1955 எனும் இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்ய முடியும் என அவர் கூறினார்.
இதேவேளை, பஸ்களில் உள்ள பயணச்சீட்டு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளமையால் சுமார் ஒரு மாத காலத்திற்கு பயணச்சீட்டினை வழங்க முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி…
12 May, 2022 | 07:38 AM
17 Jan, 2022 | 03:17 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS