நாளை முதல் நீதிமன்றம் செல்லவுள்ளதாக சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு 

by Staff Writer 04-01-2022 | 1:14 PM
Colombo (News 1st) ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கமைய, சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பதவி நீக்கம் தொடர்பில் சுசில் பிரேமஜயந்தவிடம் இன்று (04) ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியமைக்கு, நாளை முதல் மீண்டும் தனது சட்டத்தரணி பணியை ஆரம்பிக்கவுள்ளதாக பதிலளித்தார். இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து என்னை நீக்கியிருப்பதாக அறியக்கிடைத்தது. அது பெரிய விடயம் இல்லை. 2000 ஆம் ஆண்டு தான் நான் அமைச்சரானேன். நாளையில் இருந்து நீதிமன்றத்திற்கு செல்வேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதன்போது தெரிவித்தார்.